உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, டிசம்பர் 18, 2010

குறிஞ்சிப்பாடியில் மோதல்; 2 பேர் படுகாயம் 3 பேர் கைது

நெய்வேலி:

             குறிஞ்சிப்பாடி மேல விநாயககுப்பம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 34) விவசாயி. இவரும் இவரது நண்பர் வீராசாமியும் ஒரு மோட்டார் சைக்கிளில் குறிஞ்சிப்பாடி விருப்பாச்சி காலனி எம்.ஜி.ஆர். சிலை அருகே வந்து கொண்டிருந்தார்கள். அப்போது எதிரே வந்த அதே பகுதியை சேர்ந்த சிவசக்திவேல், ராமராஜன், ரத்தினவேல் ஆகியோர் வேனுக்கு வழிவிடும்படி கூறினார்கள். இதையொட்டி அவர்களுக்கும் நடராஜனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

             அப்போது சிவசக்திவேல் உள்பட 3 பேர் ஆத்திரம் அடைந்த நடராஜனையும், வீராசாமியையும் கீழே தள்ளிவிட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவர்கள் 2 பேரும் காயம் அடைந்தனர். வீராசாமி, குறிஞ்சிப்பாடி ஆஸ்பத்திரியிலும், நடராஜன், கடலூர் அரசு ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 
 

          இதுகுறித்து குறிஞ்சிப்பாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்த மோதல் தொடர்பாக சிவசக்திவேல், ராமராஜன், ரத்தினவேல் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior