உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜனவரி 29, 2011

3 ஆண்டுக்கு மேல் பயன்படுத்தாத பி.எப். கணக்குக்கு ஏப்ரல் 1 முதல் வட்டி கிடையாது

               தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலனுக்காக வருங்கால வைப்பு நிதி திட்டம் (பி.எப்.) செயல் படுத்தப்பட்டு வருகிறது. பல தொழிலாளர்கள் வேலையில் இருந்து நின்ற பிறகு பி.எப். கணக்கை முடித்து பணம் பெறாமலும், ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறும்போது பி.எப். கணக்கை மாற்றாமலும் இருந்து வருகிறார்கள்.

              இருந்தாலும் பி.எப். கணக்கில் உள்ள பணத்திற்கு வட்டி (9 1/2 சதவீதம்) சேர்ந்து கொண்டே இருக்கும். இந்த நிலையில், தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேல் பயன் படுத்தப்படாத மற்றும் வேறு கணக்குக்கு மாற்றப்படாத பி.எப். கணக்குகள் 1.4.2011 முதல் செயல்பாடு இல்லாமல் போய்விடும் என்றும், அந்த கணக்குகளுக்கு 1.4.2011-லிருந்து எவ்வித வட்டியும் வழங்கப்படாது என்றும் சென்னை மண்டல பி.எப். ஆணையாளர் கே.வி.சர்வேஸ்வரன் அறிவித்துள்ளார்.

                 எனவே, 3 ஆண்டுக்கு மேல் பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பி.எப். கணக்குகளை உடனடியாக முடித்துக் கொள்ளுமாறு சந்தாதாரர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior