உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 27, 2011

ஒரு மணி நேரத்தில் 45 லட்சம் யூனிட் மின் உற்பத்தி செய்யும் புதிய அனல் மின் நிலையங்கள்: என்.எல்.சி தலைவர் அன்சாரி


நெய்வேலி:

            குடியரசு தினம், நெய்வேலி நகரில் என்.எல்.சி. நிறுவனத்தின் சார்பில் கொண்டாடப்பட்டது. தலைவர் அன்சாரி, நெய்வேலி நகர நிர்வாக அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தியடிகளின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து கொண்டாட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

             பாரதி விளையாட்டரங்கில் அன்சாரி தேசியக் கொடியை ஏற்றி வைத்து வணக்கம் செலுத்தினார். பின்னர் என்.எல்.சி. பாதுகாப்புப்படை, தீயணைப்புப்படை, மத்திய தொழிலகப் பாதுகாப்புப்படை, ஊர்க் காவல்படை, தேசிய மாணவர்படை, நாட்டுநலப் பணித்திட்ட மாணவ மாணவிகள், சாரண சாரணியர், விளையாட்டு வீரர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

பின்னர் விழா மேடையில் நடைபெற்ற நிகழ்ச்சி, என்.எல்.சி. நிர்வாகத்துறை இயக்குனர் ஆச்சார்யா வரவேற்புரையுடன் தொடங்கியது. தொடர்ந்து குடியரசு தின செய்தி வழங்கிய அன்சாரி கூறியது:-

 
              இந்தியா, பொருளாதாரத்தில் வலிமை மிகுந்த ஒரு நாடாக அனைவராலும் மதிக்கப்பட்டால் தான், சர்வதேச சமூகத்தில் நமது நாடு ஒரு முக்கிய அங்கத்தினைப் பெறும். இதற்காக பொதுத்துறை நிறுவனங்கள் முக்கியப் பங்காற்ற வேண்டியுள்ளது. இம்முயற்சியானது, தேசத்தின் வளர்ச்சிக்காக பொதுத்துறை ஊழியர்கள் மேற்கொள்ள வேண்டிய கடமையும் கூட. இந்தியா, ஒவ்வொரு ஆண்டும் 8.5 சதவீதம் சீரான பொருளாதார வளர்ச்சியை பெற்று வருகிறது.

              தேசத்தின் வளர்ச்சியில் என்.எல்.சி நிறுவனத்தின் பங்கும் வளர்ந்து வரும் வகையில், நிறுவனத்தின் செயல்பாடுகளை, பணியாளர்கள் தங்கள் கடின உழைப்பால் மேலும் மேம்படுத்த வேண்டும். பழுப்பு நிலக்கரியை மட்டுமே எரிபொருளாகக் கொண்டு, செயல்பட்டு வரும் பட்சத்தில், என்.எல்.சி பல சவால்களை எதிர் கொள்ள வேண்டியிருப்பதால், நிலக்கரியை எரி பொருளாகக் கொண்டு இயங்கும் அனல் மின் நிலையங்களை அமைக்க என்.எல்.சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

             புதிய அனல் மின் நிலையங்கள் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்துள்ள ஒப்பந்தப்புள்ளிகள் அடிப்படையிலான கொள்கை, என்.எல்.சிக்கு ஒரு சவா லாக இருப்பினும், தகுந்த நேரத்தில் என்.எல்.சி மேற் கொண்ட விரைவான நட வடிக்கைகளால், ராஜஸ் தான் மாநிலம் பித்நோக் பகுதியிலும், பர்சிங்சர் பகுதியிலும், தமிழகத்திலும், உத்திரப்பிரதேச மாநிலத்திலும் நான்கு புதிய அனல் மின் நிலையங்களை என்.எல்.சி. நிறுவனமே அமைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

              ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள இரு மின் நிலையங்கள் (ஒரு மணி நேரத்திற்கு தலா இரண்டரை லட்சம் யூனிட்) பழுப்பு நிலக்கரி மூலமும் தமிழகம் மற்றும் உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள இரு மின் நிலையங்களும் (ஒரு மணி நேரத்திற்கு தலா இரண்டரை லட்சம் யூனிட்) நிலக்கரியின் மூலமும் இயங்கும் தன்மை கொண்டவை. இவ்வாறு அவர் கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior