உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 27, 2011

கடலூர் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்: பொது அமைப்புகள் சார்பில் அன்னதானம்



கடலூர்:

         கடலூர் திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வரர் கோவில் 274 சிவதலங்களுள் ஒன்றாகும். 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் சிறப்பாக நடத்த தீர்மானிக்கப்பட்டது. இதையொட்டி 1 1/2 கோடி ரூபாய் செலவில் கோவில் திருப்பணிகள் நடை பெற்றன. இதையடுத்து கும்பாபிஷேக விழா கடந்த 19-ந் தேதி சிறப்பு பூஜையுடன் தொடங்கியது.

                 இதைத் தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தன. மகா கும்பாபிஷேகம் இன்று (26-ந்தேதி) நடை பெற்றது. காலை 5 மணி முதல் 7 மணிவரை யாகபூஜையும், 7.30 மணி முதல் 8 மணிவரை மஹா பூர்ணாஹ¨தி, தீபாராதனை யாத்ரா தானம் ஆகிய பூஜைகளும் நடைபெற்றன. இது முடிந்த பின்னர் யாக சாலையில் இருந்து கடம் புறப்பட்டு ராஜகோபுரம் மற்றும் சகல விமானங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பாடலீஸ்வரருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. பாலமணி, மகாதேவன், நாகராஜன் ஆகியோர் தலைமையில் 108 சிவாச் சாரியார்கள் கும்பாபிஷேக பூஜைகளை செய்தனர்.

                 விழாவில் ஐகோர்ட்டு நீதிபதி மாலா, அய்யப்பன் எம்.எல்.ஏ., நீதிபதி ராமபத்ரன் ஆகியோர் பங்கேற்றனர். அங்காளபரமேஸ்வரி ஆலய தக்கார் அரிமா ஆர்.வி. நாகராஜன், சுபஸ்ரீ வள்ளி விலாஸ் உரிமையாளர் வி.பி.எஸ். கணேசன், ஆனந்தபவன் உரிமையாளர் நாராயணன், புதுவை தமிழ் சங்க தலைவர் வி.முத்து, நியூ அழகப்பா ஜுவல்லரி உரிமையாளர்கள் அழகப்பா ராஜகோபால், ரமேஷ்குமார், தமிழ்நாடு வெஜிடேரியன் ரெஸ்டாரண்டு உரிமையாளர் ராஜமாணிக்கம், அ.தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் சேவல்குமார், தொகுதி இணை செயலாளர் வக்கீல் பாலகிருஷ்ணன், மாவட்ட இளைஞர் அணி தலைவர் மாதவன், மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட பிரதிநிதி கல்யாண சுந்தரம், பி.கே. ரியல் எஸ்டேட் உரிமையாளர் வெங்கட்ராமன், ஒன்றிய கவுன்சிலர் லட்சுமணன், சூர்யா மருத்துவமனை உரிமையாளர் டாக்டர் நாராயணன், முத்து கலர் லேப் உரிமையாளர் முத்து உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  

                     கும்பாபிஷேகத்தை யொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீஸ், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பாண்டியன், குப்புசாமி, பிரசன்னகுமார், இன்ஸ்பெக்டர் சுந்தரவடி வேலு, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தபாபு உள்பட 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.  200 தன்னார்வ தொண்டர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டார்கள். 5 இடங்களில் உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள். கும்பாபிஷேகத்தை யொட்டி போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டது. பொது அமைப்புகள் சார்பில் அன்னதானம் மற்றம் குடிநீர் வழங்கப்பட்டது.  கடலூர் நகராட்சி சார்பில் குடிநீர் வழங்கப்பட்டது. மருத்துவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது. தீயணைப்பு வண்டிகளும் நிறுத்தப்பட்டிருந்தன. ஈஷா யோகா மையம் மற்றும் வெளிநாட்டினர் சார்பில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்கள் மீது ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது.

                கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தனபால், உதவி ஆணையர் ஜெகநாதன், கோவில் நிர்வாக அதிகாரி சிவக்குமார், ஆய்வாளர் வெங்கடேசன், வழிபடுவோர் சங்க தலைவர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior