உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 20, 2011

கடலூர் மாவட்டத்தில் கைவினை கலைஞர்களுக்கு விருது போட்டி விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூர் : 

            கைவிணை கலைஞர்களுக்கு தேசிய விருதுக்கான போட்டிகளில் பங்கேற்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

கடலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலக செய்திக்குறிப்பு: 

           டில்லி மத்திய அரசின் கைவினை பொருட்கள் அபிவிருத்தி ஆணையர் அலுவலகம் ஒவ்வொரு ஆண்டும் தலை சிறந்த கைவினை கலைஞர்களுக்கு போட்டி நடத்தி அதன் மூலம் தேர்வு செய்து விருது வழங்கப்படுகிறது. போட்டியில் வெற்றி பெற்றவர்களை கவுரவப்படுத்தும் வகையில் மத்திய அரசின் சான்றிதழ், ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு மற்றும் அங்கவஸ்திரம் ஆகியவற்றை ஜனாதிபதி நேரடியாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. 

 இப்போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ள கலைஞர்கள் உரிய விண்ணப்பத்துடன் 

உதவி இயக்குனர் 
(கைவினைப் பொருட்கள்) கைவினைப் பொருட்கள் விற்பனை மற்றும் சேவை விரிவாக்க மையம், 
எண்.14, பொன்நகர் மெயின்ரோடு, 
ரெட்டியார்பாளையம், 
புதுச்சேரி-605010 (போன் 0413-2206615) 

            அல்லது கடலூர் மாவட்ட தொழில் மையத்தில் வரும் மார்ச் 25ம் தேதிக்குள் நேரடியாக வழங்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior