உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, பிப்ரவரி 20, 2011

கடலூர் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு 44 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்


  கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு
 
 கடலூர் மாவட்டத்தில் 44 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்

 
கடலூர்:
 
              தமிழகத்தில் இன்று கிராம நிர்வாக அலுவலர்பணி காலியிடங்களுக்கான தேர்வு நடந்தது. இதில் 9 1/2லட்சம் பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். 
 
                      கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 44,029 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப் பட்டிருந்தது. அதன்படி இன்று கடலூர் மாவட்டத்தில் கடலூர், விருத்தாசலம், சிதம்பரம், நெய்வேலி ஆகிய 4 இடங்களில் 59 மையங்களில் கிராம நிர்வாக அலுவலர் தேர்வு நடந்தது.
 
                  கடலூரில் செயிண்ட் ஜோசப் பள்ளி உள்பட பலமையங்களில் இந்த தேர்வு நடந்தது. சுமார் 44 ஆயிரம்பேர் தேர்வு எழுதினர். கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்காக ஏராளமான ஆண்களும், பெண்களும் ஆர்வமுடன் வந்திருந்தனர். இதில் பல பெண்கள் கைக்குழந்தை மற்றும் கணவருடன் வந்திருந்ததையும் காண முடிந்தது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior