உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 14, 2011

கடலூர் மாவட்ட அளவிலான தடகளப்போட்டி வரும் 20ம் தேதி கடலூரில் நடக்கிறது

கடலூர் : 

       கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைக்களுக்கான தடகள விளையாட்டுப் போட்டி வரும் 20ம் தேதி கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடக்கிறது. 

இது குறித்து நேரு யுவக்கேந்திரா அலுவலக செய்திக்குறிப்பு: 

               கடலூர் மாவட்ட நேரு யுவக்கேந்திரா சார்பில் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கான மாவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் வரும் 20ம் தேதி கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடக்கிறது. இப்போட்டியில் பங்கேற்க 18 வயதிற்கு மேற்பட்டு 35 வயதிற்குட் பட்டவராக இருக்க வேண்டும். இதில் இருபாலருக்கும் 100, 400, 800, 1,500 மீ., ஓட்டம், குண்டு எறிதல், வட்டு எறிதல், நீளம் தாண்டுதல் மற்றும் உயரம் தாண்டுதல் ஆகிய போட்டிகள் நடக்கிறது. போட்டிகளில் பங்கேற்கும் விருப்பம் உள்ளவர்கள் வரும் 20ம் தேதி காலை 10 மணிக்கு பெயர் பதிவு செய்யவேண்டும். வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior