உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 14, 2011

பண்ருட்டி தாலுகாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு விண்ணப்பங்கள் ஒப்படைப்பு

பண்ருட்டி : 

          பண்ருட்டி தாலுகாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு விண்ணப்பங்கள் தாசில்தாரிடம்ஒப்படைக்கப்பட்டன. பண்ருட்டி தாலுகாவில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி கடந்த பிப்ரவரி 9ம் தேதி துவங்கி கடந்த 28ம் தேதி முடிவடைந்தது. 

             இதில் பண்ருட்டி, நெய்வேலி தொகுதியில் கணக்கெடுக்கும் பணியில் 78 மேற்பார்வையாளர்கள், 473 கணக்காளர்கள் ஈடுபட்டனர். ஒவ்வொரு குடும்பத்திலும் குடும்பத் தலைவர் பெயர், உறவின் முறை, இனம், பிறந்த தேதி, வயது, திருமண வயது, மாற்றுத் திறனாளியாக இருந்தால் எந்தவகை, தாய்மொழி உள்ளிட்ட 29 கேள்விகளுக்கு கணக்காளர்கள் பதில் பூர்த்தி செய்து நேற்று முன்தினம் பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவத்தை தாசில்தார் ஆனந்தராமிடம் ஒப்படைத்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior