உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மே 11, 2011

தமிழகத்தில் கடலூர் மாவட்டம் பிளஸ் 2 தேர்வில் 24வது இடத்திற்கு முன்னேற்றம்

              கல்வியில் பின்தங்கியிருந்த கடலூர் மாவட்டம், பிளஸ் 2 தேர்வில், இந்த ஆண்டு, 24வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 

               தமிழகத்தில், மிகவும் பின்தங்கிய கடலூர் மாவட்டம், கல்வியிலும் பின்தங்கியிருந்தது. அரசு பொதுத் தேர்வில் மாநிலத்தில் கடைசி இடத்தில் இருந்தது. 2008-09ம் ஆண்டு பிளஸ் 2 தேர்வில், 74.66 சதவீத தேர்ச்சி பெற்று மாநிலத்தில், 30வது இடத்தை பிடித்திருந்தது. இதைத் தொடர்ந்து, அதிகாரிகளின் முயற்சியால், மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தினர். இதன் காரணமாக, 2009-10ம் ஆண்டு, தேர்ச்சி, 78 சதவீதமாக உயர்ந்து, மாநில அளவில், 26வது இடத்திற்கு முன்னேறியது. தொடர்ந்து அதிகாரிகளின் முயற்சி, தனியார் பள்ளிகளுக்கு இடையே ஏற்பட்ட ஆரோக்கியமான போட்டியால், இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம், 81.64 சதவீதமாக உயர்ந்துள்ளதோடு, மாநில அளவில், 24வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior