உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 09, 2011

2010-2011 ஆம் ஆண்டுக்கான பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு

                2010-2011 ஆம் ஆண்டுக்கான பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. பிளஸ் 2 தேர்வு எழுதியதில் 85.9 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகளை தேர்வுத் துறை இயக்குநர் டி. வசுந்தராதேவி திங்கள்கிழமை வெளியிட்டார்.

                 மொத்த மாணவர்களில் 85.9 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றதாக அவர் அறிவித்தார். மாணவர்களில் 82.3 சதவீதம் பேரும், மாணவியரில் 89 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 60 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 18 ஆயிரத்து 846.

          1200க்கு 1190 மதிப்பெண்கள் பெற்று கே.ரேகா முதலிடம் பெற்றார். கள்ளக்குறிச்சி மாணவன் வேல்முருகன் 1187 மதிப்பெண்களுடன் 2ஆம் இடம் பிடித்தார். பாரதி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்தவர் மாணவர் வேல்முருகன்.

             4 மாணவர்கள் 1186 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் 3வது இடத்தைப் பிடித்தனர். நெல்லை எஸ்ஜெஎஸ்எஸ்ஜெ பள்ளி மாணவி வித்ய சகுந்தலா.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior