உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூலை 07, 2011

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்


கடலூர் திருப்பாப்புலியூர் அருள்மிகு வரதராஜப்பெருமாள் கோயிலில், புதன்கிழமை நடந்த கொடியேற்ற நிகழ்ச்சி. (உள்படம்) சிறப்பு அலங்காரத்தில் காட்சிதரும் வரதராஜப்பெருமாள்
கடலூர்:

              கடலூர் திருப்பாப்புலியூர் அருள்மிகு வரதராஜப்பெருமாள் கோயில் பிரமோற்சவம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 

             புதன்கிழமை கொடியேற்று விழா நடந்தது.  வரதராஜப்பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும் பிரமோற்சவம் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. காலை 10 மணிக்கு திருமஞ்சனம் பகவத்தனுக்ஞை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு கருட துவஜப் பிரதிஷ்டையும் அங்குரார்ப்பணமும் நடந்தது. 

             புதன்கிழமை காலை 6 மணிக்கு கொடியேற்று விழா நிகழ்ச்சிகள் சிறப்புப் பூஜைகளுடன் தொடங்கியது. துவஜாரோஹணம் நிகழ்ச்சியில் கோயில் தக்கார் கு.வெங்கடேசன், செயல் அலுவலர் இரா.வெங்கடேசன், எழுத்தர் ஆழ்வார் மற்றும் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.  




0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior