உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஆகஸ்ட் 20, 2011

நெய்வேலி வடக்குத்து ஊராட்சி மன்றம் சார்பில் கிராமசபை நிர்வாகக் கூட்டம்


 http://mmimages.mmnews.in/Articles/2011/Aug/491eb186-4116-43d4-bb6b-e56b6d1be19e_S_secvpf.gif
 
நெய்வேலி

               நெய்வேலியை அடுத்த வடக்குத்து ஊராட்சி மன்றம் சார்பில் கிராமசபை நிர்வாகக் கூட்டம், வடக்குத்து ஊராட்சி மன்ற தலைவர் அன்புமணி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் விஜயபாலன், பாபு, வைத்தியநாதன், கோபால் மற்றும் பூங்கோதை, தம்புசாமி, சக்திவேல், அமிர்தலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

                கூட்டத்தில் வடக்குத்து ஊராட்சிக்குட்பட்ட ரேசன் கடைகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினை, தினசரி கடையை உடனே திறப்பது, கண்ணுத்தோப்பு பால்வாடி பிரச்சினையை சுமூகமாக தீர்ப்பது, கண்ணுத்தோப்பு வடக்குத்து தெருவில் சிமென்டு சாலை அமைப்பது, குடிநீர் பிரச்சினையை தீர்ப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.  மேலும் 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படாததை கண்டித்து போராட்டம் நடத்துதல், சந்தைவெளிப்பேட்டை சர்க்கார்கேணி அருகில் சிமெண்டு சாலை, நீர்த்தேக்கத் தொட்டி அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior