உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஆகஸ்ட் 24, 2011

கடலூரில் சூறாவளி காற்றுடன் மழை

 
 
http://mmimages.mmnews.in/Articles/2011/Aug/5101597f-cd0d-48d8-964e-77e0f763ebf8_S_secvpf.gif
 
               கடலூரில் கடந்த 3 நாட்களாக வெயில் கொளுத்தி வந்த நிலையில் திங்கட்கிழமை  மாலை 5 மணி அளவில் திடீரென சூறைக்காற்று வீசியது. சிறிது நேரத்தில் மழையும் பெய்தது. சுமார் 15 நிமிடமே இந்த மழை நீடித்தது. முன்னதாக சூறாவளி காற்றால் சாலையோரங்களில் வைக்கப்பட்டிருந்த விளம்பர போர்டுகள் மற்றும் பேனர்கள் கீழே விழுந்து சேதமடைந்தன.

                சாலைகள் புழுதி மண்டலமானதால் வாகன ஓட்டிகள், பொது மக்கள் பெரிதும் சிரமம் அடைந்தனர். சூறாவளி காற்றால் நகர் முழுவதும் சுமார் 1/2 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நெல்லிக்குப்பம் நடுவீரப் பட்டு, திருமாணிக்குழி மற்றும் சுற்றுப்பகுதிகளிலும் சூறாவளி காற்று வீசியது. இதனால் அந்த பகுதிகளில் ஒரு சில மரங்கள் சாய்ந்தன.

              பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. திருமாணிக்குழியில் பெரிய புளியமரம் வேரோடு சாய்ந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக் கப்பட்டது. பல இடங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுந்ததால் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்தடை ஏற்பட்டது. மின் ஊழியர்கள் விரைந்து வந்து சீரமைப்பு பணிகளை செய்தனர். இரவு 9 மணி அளவில் அந்த பகுதிகளில் மீண்டும் மின் வினியோகம் தொடங்கியது.
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior