உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, ஆகஸ்ட் 21, 2011

ரசாயன வர்ணம் (பெயின்ட்) பூசப்பட்ட விநாயகர் சிலைகளை, நீர்நிலைகளில் கரைப்பதைத் தவிர்க்க வேண்டும்: கடலூர் மாவட்ட ஆட்சியர்

 கடலூர்:

            சுற்றுச்சூழல் மாசுபடாமல் தடுக்க, அரசு அறிவிக்கும் நீர் நிலைகளில் மட்டுமே விநாயகர் சிலைகளைக் கரைக்க வேண்டும் என்று, கடலூர் மாவட்ட ஆட்சியர் வே. அமுதவல்லி வேண்டுகோள் விடுத்து உள்ளார். 

 இதுகுறித்து ஆட்சியர் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:  

              ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியின்போது பூஜித்த விநாயகர் சிலைகள், நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம். ஆனால் பிளாஸ்டர் ஆப் பாரிஸôல் தயாரிக்கப்பட்டு, இரசாயன வர்ணம் பூசப்பட்ட சிலைகளை, நீர்நிலைகளில் கரைப்பதால் நீர்நிலைகள் மாசுபடும்.  எனவே பொதுமக்களுக்கு பின்வரும் வேண்டுகோள் விடப்படுகிறது:  களிமண்ணால் செய்யப்பட்ட சுடப்படாத எவ்வித ரசாயனக் கலவை அற்றதுமான விநாயகர் சிலைகளை மட்டுமே, எதிர்வரும் விநாயகர் சதுர்த்தியன்று வழிபாட்டுக்கு பயன்படுத்த வேண்டும்.

               இத்தகைய சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கலாம்.  ரசாயன வர்ணம் (பெயின்ட்) பூசப்பட்ட விநாயகர் சிலைகளை, நீர்நிலைகளில் கரைப்பதைத் தவிர்க்க வேண்டும். கடலோரத்தில், ஏரிகளில் விநாயகர் சிலைகளைக் கரைக்காமல், கடலுக்குள் 500 மீட்டர் தூரம் எடுத்துச்சென்று, அரசு அறிவிக்கும் இடங்களில் மட்டும் கரைக்கும்படி கேட்டுகொள்ளப் படுகிறார்கள். கடலூர் மாவட்டத்திóல் தேவனாம்பட்டினம் கடற்கரை, உப்பனாறு, கொள்ளிடம் ஆறு, வெள்ளாறு, மற்றும் காவிரி ஆற்றுப் பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.  

            விநாயகர் சதுர்த்தியை பாரம்பரிய வழக்கப்படி, சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு, கொண்டாடும் படியும், சமய நல்லிணக்கத்தையும் வழுவாது பேணிக்காக்கும்படியும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அந்த செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.




0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior