

அன்பில் பெரியசாமி
கடந்த திமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த கே.என்.நேரு இன்று (25.08.2011) காலை கைது செய்யப்பட்டார். கே.என்.நேருவுடன் திமுக முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமியும் கைது செய்யப்பட்டார். லட்சுமி சில்க்ஸ் உரிமையாளர் சுந்தரராஜூலு, மாமுண்டி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
கே.என்.நேரு உட்பட கைதான 4 பேரும் மாஜிஸ்டிரேட் புஷ்பராணி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். மாஜிஸ்ரேட் உத்தரவுப்படி கே.என்.நேரு உள்பட 4 பேரும் 15 நாள் காவலில் திருச்சி சிறைக்கு கொண்டு வரப்பட்டனர். அப்போது அவர்களை வேனில் இருந்து இறக்காமல் ஆலோசனை செய்த போலீசார், அவர்களை கடலூர் சிறைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டனர். இதையடுத்து கடலூர் சிறைக்கு அவர்களை கொண்டு சென்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக