உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், செப்டம்பர் 15, 2011

ரூ.16,775 நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

கடலூர்:

                         விபத்தில் காயம் அடைந்த நபருக்கு அரசு போக்குவரத்துக் கழகம் ரூ.16,775  நஷ்டஈடு வழங்காததால், புதன்கிழமை அரசு போக்குவரத்துக் கழக பஸ் ஜப்தி செய்யப் பட்டது. மேலும் 10 பஸ்களை ஜப்தி செய்யவும், நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

                   கடந்த 14-9-2003 அன்று கடலூரை அடுத்த பொன்னந்திட்டு கிராமத்தில் இருந்து பெரியப்பட்டு நோக்கி வேன் ஒன்று சென்றுக் கொண்டு இருந்தது. அதில் திருமண கோஷ்டியினர் பயணம் செய்தனர். அந்த வேன் மீது கடலூரில் இருந்து சிதம்பரம் நோக்கிச் சென்ற அரசு பஸ் மோதியதில், ஒருவர் இறந்தார். 4 பேருக்கு பலத்த காயமும், 11 பேருக்கு சாதாரண காயமும் ஏற்பட்டது.பாதிக்கப்பட்ட நபர்கள் சார்பில் நஷ்டஈடு கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததில், அரசு போக்குவரத்துக் கழகம் ரூ. 14 லட்சம் நஷ்டஈடு வழங்க, கடலூர் முதன்மை சார்பு நீதின்றம் 26-4-2006-ல் உத்தரவிட்டது. ஆனால் நஷ்ட ஈட்டுத் தொகை வழங்கப்படவில்லையாம். எனவே அதே நீதிமன்றத்தில் நிறைவேற்று மனுதாக்கல் செய்யப்பட்டது. 

              எனவே நஷ்டஈட்டுத் தொகைக்காக, அரசு பஸ்களை ஜப்தி செய்ய 29-8-2011 அன்று நீதிமன்றம் உத்தரவிட்டது.காயம் அடைந்த பொன்னந்திட்டு கெüசல்யாவுக்கு ரூ. 16,775 நஷ்ட ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதற்காக புதன்கிழமை சென்னையில் இருந்து வேளாங்கண்ணி சென்ற, பச 01 ச 7834 என்ற பதிவு எண் கொண்ட அரசு பஸ்ûஸ, நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர். 

               அந்த பஸ் கடலூர் மாவட்ட செசன்ஸ் நீதிமன்ற வளாகத்தில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.இந்த நஷ்டஈடு வழக்கில் மேலும் 10 பஸ்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதாகவும், வியாழக்கிழமை முதல் ஒவ்வொரு பஸ்ஸôக ஜப்தி செய்யப்படும் என்றும், வழக்கில் ஆஜரான வழக்கறிஞர்கள் ராதாகிருஷ்ணன், சந்திரசேகரன் ஆகியோர் தெரிவித்தனர்.





0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior