உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், செப்டம்பர் 15, 2011

நெய்வேலி மாணவி ஐஸ்வர்யா உலகக் கோப்பை கூடைப்பந்து போட்டியில் பங்கேற்ப்பு

நெய்வேலி:

           இத்தாலி ரிமினி நகரில் நடந்த ஜூனியர் உலகக் கோப்பை கூடைப்பந்து போட்டியில் நெய்வேலியைச் சேர்ந்த மாணவி ஐஸ்வர்யா நட்ராஜ் விளையாடியுள்ளார்.

                நெய்வேலியைச் சேர்ந்த நட்ராஜின் மகள் ஐஸ்வர்யா. இவர் தற்போது சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவா கலைக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார் . கூடைப்பந்துப் போட்டியில் பல்வேறு முறை தேசிய போட்டிகளில் முத்திரைப் பதித்துள்ள மாணவி ஐஸ்வர்யா நட்ராஜ், தற்போது இத்தாலி நாட்டிலுள்ள ரிமினி எனும் நகரில் செப்டம்பர் 9 முதல் 11-ம் தேதி வரை நடந்த ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் விளையாடியுள்ளார். உலகக் கோப்பை கூடைப்பந்துப் போட்டியில் பங்கேற்கும் முதல் தமிழக வீராங்கனை எனும் பெருமையைப் பெற்றுள்ள இவர், பல்வேறு தேசியப் போட்டிகளிலும், சர்வதேசப் போட்டிகளிலும் தனி முத்திரையும் பதித்துள்ளார்.










0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior