உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, செப்டம்பர் 24, 2011

கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் மனு தாக்கலின் இரண்டாவது நாளில் 448 பேர் மனு தாக்கல்

கடலூர்:

          உள்ளாட்சித் தேர்தல் மனு தாக்கலின் இரண்டாவது நாளான நேற்று 448 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

            உள்ளாட்சித் தேர்தல் வரும் 17 மற்றும் 19ம் ஆகிய இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதற்கான மனு தாக்கல் கடந்த 22ம் தேதியிலிருந்து துவங்கியது.தேர்தலுக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக செய்து வருகிறது. 

மனு தாக்கலின் முதல் நாளான நேற்று முன்தினம் கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 92 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இரண்டாம் நாளான நேற்று

கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு 41 பேரும், 
கிராம ஊராட்சி உறுப்பினருக்கு 401, 
ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 3, 
பேரூராட்சி கவுன்சிலர் பதவிக்கு 3 பேர் 

என மொத்தம் 448 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களாக 540 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.




0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior