உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, செப்டம்பர் 23, 2011

கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான மனுதாக்கல் இடம் அறிவிப்பு

கடலூர்:

          கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான மனு வழங்கப்படும் இடம் மற்றும் மனு தாக்கலுக்கான இடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

          தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அக்., 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்கும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையொட்டி மனுக்கள் நேற்று முதல் வரும் 29ம் தேதி காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வழங்கப்படுகிறது.

             கடலூர் மாவட்ட ஊராட்சி உறுப்பினர், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர், ஊராட்சித் தலைவர் ஆகிய பதவிகளுக்கான மனு அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வழங்கப்படும். கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான மனு அந்தந்த கிராம ஊராட்சிகளில் உள்ள ஊராட்சி அலுவலகத்தில் வழங்கப்படும்.
           நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான மனு அந்தந்த நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட மனுக்கள், மனு வழங்கப்பட்ட அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களால் பெற்றுக் கொள்ளப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 









0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior