உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், அக்டோபர் 19, 2011

திட்டக்குடியில் கள்ளத்தனமாக மதுபான பாட்டில்கள் விற்பனை: ரூ.10 ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல்



 http://mmimages.mmnews.in/Articles/2011/Oct/f17bdb25-1425-4c99-a6d0-3aa66390807a_S_secvpf.gif
திட்டக்குடி:

               திட்டக்குடி பகுதியில் கள்ளத்தனமாக மதுபான பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக திட்டக்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு வனிதாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

                   அதன்பேரில் திட்டக்குடி இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது வதிஷ்டபுரம் மின்வாரிய அலுவலகம் அருகே மயான பாதையில் ஒரு தனியார் செங்கல் சூளை அருகில் ஒருவர் டாஸ்மார்க் மதுபான பாட்டில்கள் வைத்து விற்பனை செய்வதை கண்டறிந்தனர்.

                போலீசாரை பார்த்தவுடன் அந்த நபர் தப்பி ஓடிவிட்டார். அவர் விட்டு சென்ற 72 பாட்டில்களை போலீசார் கைப்பற்றினர். இவற்றின் மதிப்பு சுமார் 10 ஆயிரத்து 800 ரூபாய் ஆகும். மேலும் விசாரணையில் தப்பி ஓடியவர் அதே பகுதியை சேர்ந்த செல்வம் என தெரியவந்தது.  இந்த மதுபாட்டில்கள் வாக்காளர்களுக்கு அன்பளிப்பாக வழங்க பதுக்கி வைக்கப்பட்டதா? அல்லது கள்ளத்தனமாக விற்பனை செய்ய கொண்டு வரப்பட்டவையா? என போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.








0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior