உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், அக்டோபர் 06, 2011

கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல்

கடலூர் : 

         கடலூர் மாவட்டத்தில் உள்ள 6,492 உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் 702 பதவிகளுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 6 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு எவரும் மனு தாக்கல் செய்யவில்லை. எஞ்சிய 5,784 பதவிகளுக்கு 20 ஆயிரத்து 533 பேர் போட்டியிடுகின்றனர்.


              உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 17 மற்றும் 19ம் தேதிகளில் நடைபெறும் என தமிழக தேர்தல் ஆணையம் கடந்த 21ம் தேதி அறிவித்தது. 

             கடலூர் மாவட்டத்தில் 13 ஒன்றியங்கள், 5 நகராட்சிகள் மற்றும் 16 பேரூராட்சிகளில் 6,506 உள்ளாட்சி பதவிகள் உள்ளன. அதில் ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர், நகராட்சி தலைவர், நகராட்சி கவுன்சிலர், பேரூராட்சி தலைவர் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் என மொத்தம் 6,492 பதவிகளுக்கு மக்களே நேரடியாக தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 17 மற்றும் 19ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான மனு தாக்கல் கடந்த 22ம் தேதி முதல் 29ம் தேதிவரை நடந்தது. 

                  அதில் 5,040 ஊராட்சி வார்டுகளில் 4 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு எவரும் மனு தாக்கல் செய்யவில்லை (விவரம் பெட்டி செய்தி). எஞ்சிய 5,036 பதவிகளுக்கு 15,609 பேர் மனு தாக்கல் செய்தனர்.கடந்த 30ம் தேதி நடந்த பரிசீலனையில் 134 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அதில், கடலூர் ஒன்றிய தோட்டப்பட்டு ஊராட்சி 8வது வார்டு பொது பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் விவரம் விளம்பரம் செய்யாததால் கடந்த தேர்தலை போல் நினைத்து ஆண் ஒருவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது  

                .அதேப்போன்று பண்ருட்டி ஒன்றியம் வீசூர் ஊராட்சி 1வது வார்டு எஸ்.சி., (பொது) ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த வார்டிற்கு பிற்பட்டோர் பிரிவைச் சேர்ந்த ஆதிதிராவிட கிறிஸ்தவர் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நேற்று முன்தினம் 1,318 பேர் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றதால், 680 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 4,354 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 13 ஆயிரத்து 477 பேர் போட்டியிடுகின்றனர்.

               அதேப்போன்று 683 ஊராட்சிகளின் தலைவர் பதவிக்கு மொத்தம் 4,120 பேர் மனு தாக்கல் செய்தனர். அதில் கடந்த 30ம் தேதி ஆய்வில் 44 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.நேற்று முன்தினம் 1,182 பேர் மனுக்களை வாபஸ் பெற்றனர். இறுதிப் பட்டியலில் 18 ஊராட்சித் தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். எஞ்சிய 665 ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கு 2,876 பேர் போட்டியிடுகின்றனர்.மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களில் உள்ள 287 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு 2,127 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். 

             அதில் 38 மனுக்கள் தள்ளுபடி செய்யபட்டது. 389 பேர் மனுக்களை வாபஸ் பெற்றதால் தற்போது 1,700 பேர் போட்டியிடுகின்றனர். 29 மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு தாக்கல் செய்த 272 மனுக்களில் 13 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 55 பேர் வாபஸ் பெற்றதால் தற்போது 204 பேர் களத்தில் உள்ளனர். ஐந்து நகராட்சி தலைவர் பதவிகளுக்கு 45 பேரும், 174 கவுன்சிலர் பதவிகளுக்கு 955 பேர் போட்டியிடுகின்றனர். 16 பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு 126 பேரும், 258 கவுன்சிலர் பதவிகளில் 4 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 

             மீதமுள்ள 254 பதவிகளுக்கு 1,150 பேர் போட்டியிடுகின்றனர்.மாவட்டத்தில் மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்பட வேண்டிய 6,492 உள்ளாட்சி பதவிகளில் 702 பதவிகளுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 6 ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு தேர்தல் நடைபெறவில்லை. மீதமுள்ள 5,784 பதவிகளுக்கு 20,533 பேர் போட்டியிடுகின்றனர்.













0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior