உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், அக்டோபர் 06, 2011

தமிழக அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் இணையதளம் மற்றும் செல்போன் வழியாக பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி


தமிழ்நாடு அரசு விரைவு பஸ்களில் இணையதளம் மற்றும் செல்போன் மூலம் முன்பதிவு செய்வதற்கான வசதியை, தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே விடியோ கான்பரன்சிங் முறை மூலம் ஜெயலலிதா திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.



                 இணையதளம் மற்றும் செல்போன் மூலம் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதியை முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.  ரயில்வே மற்றும் விமான போக்குவரத்து துறைகளில் இணையதளம் மூலம் பயணிகள் முன்பதிவு செய்வது போன்றே முதல் முறையாக தமிழக அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில் இணையதளம் மற்றும் செல்போன் வழியாக பயணச்சீட்டு முன்பதிவு செய்ய www.tnstc.in என்ற இணையதள முகவரி மூலம் இ-டிக்கெட் முன்பதிவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

                  அரசு பஸ்களில் பயணிகள் முன்பதிவு செய்யும் வசதியினை எந்த நேரத்திலும் எந்த இடத்தில் இருந்தும் இணையதளம் மூலமாகவும், செல்போன் வழியாகவும் 30 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.  பயணிகள் எவ்வித சிரமும் இன்றி தங்களது பயணச்சீட்டினை இணையதளம் வழியாக  கிரெட் கார்டு, டெபிட் கார்டு மூலம் முன்பதிவு செய்து கொள்ளவும் தாங்கள் விருப்பப்பட்ட பஸ்களையும், இருக்கைகளையும் தேர்வு செய்து கொள்வதுடன் பஸ் கட்டணம், புறப்படும் நேரம் மற்றும் இதர விவரங்களையும் அறிந்து கொள்ள இயலும். 

                இணையதளத்திலேயே தகவல்: அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பாக தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இப்போது செயல்பட்டு வரும் 50 முன்பதிவு மையங்களுடன் கூடுதலாக புதிய முகவர்களை நியமித்து 300 முன்பதிவு மையங்களாக அதிகரிக்கப்படும். இந்த அதிகரிக்கப்பட உள்ள முன்பதிவு மையங்களுக்கு பயணிகள் நேரடியாக சென்று இணையதள வசதியுடன் முன்பதிவு செய்து கொள்ளலாம்.  பயணிகள் இ-டிக்கெட் மூலம் பயணச்சீட்டினை முன்பதிவு செய்தவுடன் அவர்களது செல்போனுக்கு பணப் பரிவர்த்தனை குறித்த எஸ்.எம்.எஸ். அனுப்பும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.  

                 தகவல் தொழில்நுட்ப உதவியுடன் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில் பயணம் செய்வதற்கு இணையதளம் மற்றும் செல்போன் மூலம் பயணச்சீட்டை முன்பதிவு செய்யும் வசதியை தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.  இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி, அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் எஸ்.மணி, சென்னை மாநகர போக்குவரத்து மேலாண் இயக்குநர் பூபதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.  தேர்தல் பிரசாரம்: தலைமைச் செயலகத்தில் முதல்வர் தொடங்கி வைத்த பல்வேறு திட்டங்களில் சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்கள் யாரும் பங்கேற்கவில்லை.  

                  உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அனைவரும் தங்களது மாவட்டங்களில் தீவிர பிரசாரம் செய்து வருவதால் அவர்கள் கலந்து கொள்வில்லை.  ""முதல்வர் தொடங்கி வைத்த அனைத்து திட்டங்களுக்கும் மாநிலத் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று நடத்தப்பட்டுள்ளது என்றும், அமைச்சர்கள் அனைவரும் தங்களது சொந்த மாவட்டங்களில் இருப்பதால் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை'' என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.  



 முகவரி







 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior