உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, அக்டோபர் 30, 2011

கடலூர் மத்திய சிறையில் பொன்முடியை மு.க.ஸ்டாலின் சந்தித்தார்

 http://mmimages.mmnews.in/Articles/2011/Oct/641b10de-216a-4c76-a561-617dc2989095_S_secvpf.gif
 
கடலூர்:
 
       நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடியை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் இருக்கிறார். இவரை முன்னாள் துணை முதல்-அமைச்சரும், தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து பேசினார்.

இதன் பின் அவர் பேட்டியளித்தார்
 
கேள்வி: 
 
முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்பட்டதற்கான காரணம் என்ன?

பதில்: இந்த கேள்வியை முதல்வர் ஜெயலலிதாவிடம் கேட்க வேண்டும்.  

கேள்வி: 
 
         தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலிலும், உள்ளாட்சி தேர்தலிலும் அதிக இடங்களில் அ.தி.மு.க. வென்று உள்ளது. இதனால் நிர்வாகம் எப்படி இருக்கும் என நினைக்கிறீர்கள்?

பதில்: சட்டமன்ற தேர்தலில் மக்களின் மனமாற்றத்தின் காரணமாக அ.தி.மு.க. அதிக இடங்களை பெற்று இருக்கலாம். ஆனால் உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரையில் 50 சதவீதம்பேர் தோற்றவர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள். வெற்றி பெற்றவர்கள் தோற்று இருக்கிறார்கள்.

கேள்வி: 
 
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலிலும், உள்ளாட்சி தேர்தலிலும் அதிக இடங்களில் அ.தி.மு.க. பிடித்து இருப்பதால் தமிழக அரசு தவறு செய்தால் யார் தட்டி கேட்பார்கள்?

பதில்: ஏற்கனவே இது சம்மந்தமாக நீதிமன்றத்திற்கு சென்று உள்ளோம். ஆனால் இப்போது கேள்வி கேட்க்க கூடிய இடத்தில் பத்திரிகைகள்தான் உள்ளன.  

கேள்வி: 
 
  உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. அதிக இடங்களை பிடித்ததற்கு தேர்தல் ஆணையம் உடந்தையாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

பதில்: தேர்தல் ஆணையம் மட்டும் உடந்தை இல்லை. ஆட்சியில் உள்ளவர்கள் உடந்தையும் உள்ளது.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

            அப்போது புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் ஜானகிராமன், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், ஆதி.சங்கர் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சபா.ராஜேந்திரன், இள.புகழேந்தி, செஞ்சி கண்ணன், உதயசூரியன், குழந்தை தமிழரசன், நந்தகோபால கிருஷ்ணன், முன்னாள் எம்.பி. கணேசன், முன்னாள் நகரமன்ற தலைவர்கள் ஏ.ஜி.ராஜேந்திரன், நகர இளைஞரணி அமைப்பாளர் கே.எஸ்.ராஜா, தங்கராசு, தொ.மு.ச. ராஜா, தங்க ஆனந்தன், பழனி, ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன், தலைமை கழக பேச்சாளர் வாஞ்சிநாதன், மாணவரணி அகஸ்டின் உள்பட பலர் உடன் இருந்தனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior