உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், நவம்பர் 15, 2011

கிராம நிர்வாக அதிகாரிகளுக்கும் பிரிண்டருடன் கூடிய மடிக்கணினி

சென்னையில் நேற்று  நடந்த கலெக்டர்கள் 2ம் நாள் மாநாட்டில் முதல் அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்

* எப்போதெல்லாம் கடலில் மீனவர்கள் காணாமல் போகிறார்களோ, அப்போதெல்லாம் தேவைக்கேற்ப வாடகைக்கு ஹெலிகாப்டர் எடுத்து, மீனவர்களை தேடி, மீட்கும் பணி மேற்கொள்ளப்படும்.

* மீனவர்களை தேடி, மீட்கும் பணிக்காக கடலோர காவல்படைக்கும், கடலோர போலீசாருக்கும் நவீன அதிவிரைவு படகுகள் வழங்கப்படும்.

* புதிய அரசு ஆஸ்பத்திரிகளில் சூரியஒளி மூலம் மின்சார உற்பத்தி செய்யப்படும்.

* மாற்றுத் திறனாளிகள் ஒய்வூதியம் பெறுவதற்கு குறைந்தபட்ச வயது வரம்பு 45 என்று நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது, 18 வயதாக குறைக்கப்படுகிறது.

* அனைத்து மாவட்டங்களிலும் சட்ட விஷயங்களை மேற்கொள்வதற்காக கலெக்டரின் நேர்முக உதவியாளர் என்ற புதிய பணியிடம் உருவாக்கப்படும்.

* பொதுமக்களுக்கு சிறந்த சேவை அளிப்பதற்காக அனைத்து கிராம நிர்வாக அதிகாரிகளுக்கும் பிரிண்டருடன் கூடிய லேப-டாப் வழங்கப்படும் - என்பன உள்பட 32 மாவட்டங்களுக்கு 43 வளர்ச்சி திட்டங்களை அறிவித்தார் 













0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior