உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், நவம்பர் 22, 2011

கடலூர் பா.ம.க. அலுவலகம் யாருக்கு சொந்தம்: சார் ஆட்சியர் விசாரணை

கடலூர்:

            கடலூர் பா.ம.க. அலுவலகம் யாருக்கு சொந்தம் என்ற பிரச்னை தொடர்பாக, கடலூர் சார் ஆட்சியர் திங்கள்கிழமை விசாரணை நடத்தினார்.  பா.ம.க. இணைப் பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ. வேல்முருகன் அண்மையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் புதிய கட்சி தொடங்க உத்தேசித்து வருவதாக தெரிகிறது. அதுகுறித்து அவ்வப்போது தனது ஆதரவாளர்கள் கூட்டத்தைக் கூட்டி, தனது பலத்தை நிரூபிக்க முயன்று வருகிறார்.

             இந்த நிலையில் கடலூர் பா.ம.க. அலுவலகம் யாருக்குச் சொந்தம் என்ற பிரச்னை எழுந்துள்ளது. வேல்முருகன், பா.ம.க. துணைப் பொதுச் செயலாளர் ப.சண்முகம் மற்றும் முத்தையப் படையாச்சி, அமராவதி என்று மூன்று தரப்பினர் இந்த கடலூர் அலுவலகத்தை சொந்தம் கொண்டாடுகிறார்கள். இதுதொடர்பாக மூன்று தரப்பினரும் போலீசாரி டமும், மாவட்ட ஆட்சியரிடமும் மனு கொடுத்தனர். இதையடுத்து, கடலூர் சார் ஆட்சியர் விசாரணைக்கு, காவல் துறை பரிந்துரை செய்தது. இந்த நிலையில் பா.ம.க. தரப்பினருக்கும் வேல்முருகன் தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படக்கூடும் என்பதால், கடந்த 12-ம் தேதி, கடலூர் பா.ம.க. அலுவலகத்தை சார் ஆட்சியர் பூட்டி சீல் வைத்தார். 

           இதுகுறித்த விசாரணை கடலூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடந்தது. சார் ஆட்சியர் கிரண்குராலா விசாரணை நடத்தினார். அப்போது மூன்று தரப்பினரும் ஆதாரங்களை முறையாக அளிக்கவில்லை. இந்த நிலையில் பா.ம.க. அலுவலகம் உள்ள நிலம் நகராட்சிக்குச் சொந்தமானது என்றும், ராஜலட்சுமி என்பவருக்கு நீண்டகால குத்தகைக்கு அளிக்கப்பட்டு இருந்தது என்றும் மற்றொரு தகவல் கிடைத்து உள்ளது. எனவே, இப்பிரச்னையில் கடலூர் நகராட்சி நிர்வாகத்தை 4-வது தரப்பாக விசாரணையில் சேர்க்க முடிவு செய்து சம்மன் அனுப்ப தீர்மானிக்கப்பட்டது.     இதையடுத்து, விசாரணையை சார் ஆட்சியர் டிசம்பர் 9-ம் தேதிக்குத் தள்ளி வைத்தார்.









0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior