உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், நவம்பர் 22, 2011

கடலூர் மாவட்ட மைய நூலகத்தில் 44-வது தேசிய நூலக வாரவிழா

கடலூர்:

         கடலூர் மாவட்ட அரசு நூலகங்களின் வாசகர்கள் எண்ணிக்கையை, 30 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று ஊரகத் தொழில்கள் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் வேண்டுகோள் விடுத்தார்.  44-வது தேசிய நூலக வாரவிழா, கடலூர் மாவட்ட மைய நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

இதில் நூல்கள் கண்காட்சியைத் தொடங்கி வைத்து ஊரகத் தொழில்கள் துறை அமைச்சர் எம்.சி. சம்பத்  பேசியது:  

               நூலகங்கள் அறிவை வளர்ப்பவை. நூலகங்கள் பெருக வேண்டும். கடலூர் மாவட்டத்தில் மைய நூலகம் உள்ளிட்ட 135 நூலகங்கள் உள்ளன. இவற்றில் 63 கிளை நூலகங்கள், 28 பகுதி நேர நூலகங்கள், 43 ஊரக நூலகங்கள். இவற்றில் 1,40,025 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். 1,365 பேர் புரவலர்களாகச் சேர்ந்து உள்ளனர். அனைத்து நூலகங்களிலும் 21,19,786 புத்தகங்கள் உள்ளன.  2010-11-ம் ஆண்டில் 21,71,561 வாசகர்கள் இந்த நூலகங்களைப் பயன்படுத்தி உள்ளனர். வரும் ஆண்டில் வாசகர்கள் எண்ணிக்கை 30 லட்சமாக உயர வேண்டும். அதற்காக நூலகங்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே நூலக அதிகாரிகள் ஏற்படுத்த வேண்டும்.  

        கடலூர் மாவட்ட மைய நூலகத்தில் நூல்கள் வெளியீட்டு அரங்கம் கட்ட தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் வழங்குகிறேன் என்றார். நூலகப் புரவலர்கள் சேர்க்கையைத் தொடங்கி வைத்து அமைச்சர் செல்வி ராமஜெயம் பேசுகையில், நூலகங்கள் அறிவு சார்ந்தவை. நூலகத்தை அதிகமான வாசகர்கள் பயன்படுத்த வேண்டும். மக்களின் வரவேற்பை அதிகம் பெற்றதாக நூலகங்கள் அமைய வேண்டும். அதற்கான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்றார். மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி தலைமை வகித்தார். 

            நெய்வேலி சட்டப் பேரவை உறுப்பினர் சிவசுப்பிரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ. அய்யப்பன், அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் இரா.பழநிசாமி, நகரச் செயலாளர் ஆர்.குமரன், நூலக வாசகர் வட்டத் தலைவர் தங்க சுதர்சனம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாவட்ட நூலக அலுவலர் சின்னதம்பி வரவேற்றார். முதல் நிலை நூலகர் சந்திரபாபு நன்றி கூறினார். 












0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior