உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, டிசம்பர் 11, 2011

ஸ்ரீமுஷ்ணம் துணை மின்நிலையத்தில் ரூ.1.91 கோடியில் புதிய மின் மாற்றி

சிதம்பரம்:

            கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் துணை மின்நிலையத்தில் ரூ.1.91 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய கூடுதல் திறன் மின்மாற்றிகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

              ஊரக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், புதிய மின்மாற்றிகளை இயக்கி வைத்தார். சமூக நலத்துறை அமைச்சர் செல்விராமஜெயம் முன்னிலை வகித்தார். ஆட்சியர் வே.அமுதவல்லி, காட்டுமன்னார்கோவில் சட்டப்பேரவை உறுப்பினர் நாக.முருகுமாறன், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் பி.அருள்காந்தி, சிதம்பரம் கோட்ட செயற்பொறியாளர் எஸ்.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டதன் மூலம் ஸ்ரீமுஷ்ணம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் குறைந்த மற்றும் அதிக மின்அழுத்தம் இல்லாமல் சீரான மின்சார விநியோகம் கிடைக்கும் என மேற்பார்வை பொறியாளர் பி.அருள்காந்தி தெரிவித்தார்.














0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior