உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, டிசம்பர் 11, 2011

முல்லை பெரியாறு அணை பிரச்சினை: கடலூர் மாவட்டத்தில் தி.மு.க.சார்பில் உண்ணாவிரதம்

கடலூர்:
 
கடலூர் மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:-

               முல்லை பெரியாறு  அணை பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டிட, மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கடலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம், நெல்லிக்குப்பம் ஆகிய 5 நகரங்களில் நாளை (12-ந் தேதி) காலை 8 மணி முதல் 5 மணிவரை உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெற உள்ளது.

சிதம்பரம் பஸ்நிலையம்
 
              காந்தி சிலை அருகில் எனது (எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்) தலைமையில், நகர செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர்கள் முத்துபெருமாள், பூபாலன், மாமல்லன், செயராமன் ஆகியோர் முன்னிலையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.  

கடலூர் மஞ்சக்குப்பம் 
 
           தபால் நிலையம் அருகில் மாநில மாணவரணி செயலாளர் புகழேந்தி தலைமையில் நகர செயலாளர் தங்கராசு, ஒன்றிய செயலாளர்கள் ஜெயபால், சிவகுமார், பொதுக்குழு உறுப்பினர் ஏ.ஜி.ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் பாஸ்கரன், நகர இளைஞரணி அமைப்பாளர் கே.எஸ்.ராஜா, வக்கீல் சிவராஜ் ஆகியோர் முன்னிலையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.

நெல்லிக்குப்பம் 
 
             போலீஸ் நிலையம் எதிரில் பண்ருட்டி ஒன்றிய செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சபா.ராஜேந்திரன், மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் நெல்லிக்குப்பம் புகழேந்தி தலைமையில் ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன், நகர செயலாளர் மணிவண்ணன், பேரூர் செயலாளர்கள் கலியமூர்த்தி, சடாட்சரம் செயலாளர் அணி பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.  

விருத்தாசலம் 
         
           உழவர்சந்தை எதிரில் மாவட்ட துணை செயலாளர் கணேசன், முன்னாள் எம்.எல்.ஏ. குழந்தை தமிழரசன் ஆகியோர் தலைமையில் நகர செயலாளர் தண்டபாணி, ஒன்றிய செயலாளர்கள் ராமு, ஞானமுத்து, கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.

பண்ருட்டி 
 
             பஸ் நிலையம் எதிரில் முன்னாள் எம்.எல்.ஏ. நந்தகோபால கிருஷ்ணன் தலைமையில் நகர செயலாளர்கள் ராஜேந்திரன், புகழேந்தி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தணிகைசெல்வம், ஜெயராமன் ஆகியோர் முன்னிலையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. 
 
           இந்த உண்ணாவிரத போராட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை, முன்னாள் எம்.எல்.ஏ., எம்.பி. மாணவரணி, மகளிரணி உள்பட அனைத்து நிர்வாகிகளும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும்.  இவ்வாறு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior