உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, டிசம்பர் 17, 2011

கடலூர் மாவட்டத்தில் போலி குடும்ப அட்டை பற்றித் தகவல் கொடுத்தால் ரூ.250 சன்மானம்

கடலூர்:
 
          போலி குடும்ப அட்டை பற்றித் தகவல் கொடுத்தால் ரூ. 250 சன்மானம் வழங்கப்படும் என்று, மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி அறிவித்து உள்ளார்.  

புதன்கிழமை கடலூர் மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி  வெளியிட்ட செய்திக் குறிப்பு:

           கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசாணையின்படி அத்தியாவசியப் பொருள்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பாக தகவல் அளிப்போருக்கு (கைப்பற்றுதலில் முடிந்தால்) ரூ.1,000 சன்மானம் வழங்கப்படும். போலி குடும்ப அட்டைகள் தொடர்பாக தகவல் கொடுத்தால் ரூ.250 சன்மானம் வழங்கப்படும்.  தகவல்களை கடலூர் மாவட்ட வழங்கல் அலுவலர், தனி வட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவிக்கலாம். தகவல் அளிப்போரின் பெயர் மற்றும் முகவரி ரகசியமாக வைக்கப்படும்.  

தகவல் தெரிவிக்கும் அதிகாரிகளின் செல்போன் எண்கள்: 

மாவட்ட விநியோக அலுவலர் 9445000209. 

வட்ட வழங்கல் அலுவலர்கள்: 

கடலூர் 9005000210. 
சிதம்பரம்: 9445000211. 
காட்டுமன்னார்கோயில் 9445000212.
திட்டக்குடி 9445000214. 
விருத்தாசலம் 9445000213. 
பண்ருட்டி 9445000215. 
குறிஞ்சிப்பாடி 9445796405.









0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior