உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 21, 2011

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இட்லி மாவு நவீன தயாரிப்பு மற்றும் விற்பனை குறித்து இலவச பயிற்சி

சிதம்பரம் : 

          இட்லி மாவு நவீன தயாரிப்பு மற்றும் விற்பனை குறித்து இலவச பயிற்சி முகாமில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்களிடமிருந்து விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் பொருளாதாரத்துறை முதன்மை ஆராய்ச்சியாளர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: 

               சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் பொருளாதாரத்துறையில் மத்திய உயிர் தொழில் நுட்பவியல் துறை நிதி உதவியுடன் வரும் ஜனவரி 10ம் தேதியில் இருந்து 12ம் தேதி வரை 3 நாட்கள் இட்லி மாவு நவீன தயாரிப்பு மற்றும் விற்பனை குறித்து முகாம் இலவசமாக நடத்தப்பட உள்ளது.

யிற்சியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் தங்கள் பெயர், முகவரி, கல்வித்தகுதி, புகைப்படம், தொலைபேசி எண் மற்றும் 5 ரூபாய்க்கான தபால் தலை ஒட்டிய சுய விலாசமிட்ட உறையுடன்

முதன்மை ஆராய்ச்சியாளர் (உணவு பதப்படுத்துதல்), 
வேளாண் பொருளாதாரத்துறை, 
வேளாண் புலம், 
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
அண்ணாமலை நகர் 

என்ற முகவரிக்கு வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior