உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜனவரி 06, 2012

கடலூர் மாவட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கர் பன்னீர்கள் கரும்பு நாசம்: பொங்கலுக்கு விலை கடுமையாக அதிகரிக்கும்

கடலூர்:

           கரும்பு அதிகம் விளையும் மாவட்டங்களில் கடலூர் மாவட்டம் ஒன்று. இங்கு சர்க்கரை உற்பத்தி செய்ய தேவைப்படும் வெள்ளை கரும்பு, பொங்கல் பண்டிகைக்கு கடித்து சாப்பிடும் கறுப்பு கரும்பு ஆகிய இரு வகைகளும் பயிரிடப்படுகின்றன. தற்போது பொங்கல் பண்டிகைக்கு பயன்படுத்துவதற்காக 10 ஆயிரம் ஏக்கர் கறுப்பு கரும்புகள் பயிரிடப்பட்டிருந்தன.

              சிதம்பரம் பகுதியில் உள்ள வல்லம்படுகை, வேலக்குடி, காந்தியமேடு, கடவாக்குறிச்சி, பண்ருட்டி பகுதியில் உள்ள கொரணாப்பட்டு, சத்திரம், சிவானந்தபுரம், பட்டினக்கோட்டை, மதன கோபாலபுரம் மற்றும் நெய்வேலி பகுதியிலும் கறுப்பு கரும்புகள் பயிரிட்டிருந்தனர். “தானே” புயலால் இந்த கரும்புகள் அடியோடு நாசமாகிவிட்டது.

             எனவே பொங்கலுக்கு கரும்பு அனுப்ப முடியாத நிலை உருவாகி உள்ளது. சாதாரணமாக ஒரு கரும்பு 15 ரூபாயிலிருந்து 20 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்தது. இந்த கரும்புகள் வெளி மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படும். இன்னும் 2 அல்லது 3 நாட்களில் இவற்றை வெட்டி வெளி மார்க்கெட்டுக்கு அனுப்புவதற்கு தயாராக இருந்தனர்.

             இதற்காக வெளி மாவட்ட வியாபாரிகள் விவசாயிகளுக்கு முன்பணம் கொடுத்திருந்தனர்.ஆனால் இப்போது கரும்பு முற்றிலும் நாசமாகி விட்டதால் இவற்றை அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த ஆண்டு தமிழ்நாட்டில் கரும்பு விலை கடுமையாக அதிகரிக்கும் என்று விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்தனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior