உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, ஜனவரி 22, 2012

தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் 20 ஆயிரம் பேருக்கு இலவச போர்வை

 http://mmimages.mmnews.in/Articles/2012/Jan/60624c2b-e96e-4801-86d1-b414b1c3bbc5_S_secvpf.gif

வடலூர்:

            கடலூர் மாவட்டத்தில் தானே புயலால் பாதித்த 20 ஆயிரம் பேருக்கு தி.மு.க. சார்பில் இலவச போர்வைகளை எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் வழங்கினார். தமிழகத்தில் தானே புயலால் பாதித்த பகுதிகளை தி.மு.க. தலைவர் கருணாநிதி நேரில் பார்வையிட்டார். அந்த பகுதிகளுக்கு புயல் சேத நிவாரணமாக தி.மு.க. சார்பில் ரூ.50 லட்சம் வழங்குவதாக அறிவித்தார்.

            அதையடுத்து கடலூர் மாவட்டத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரண நிதியை மாவட்ட தி.மு.க. செயலாளர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் மாவட்ட நிர்வாகிகளிடம் சென்னையில் அவர் வழங்கி னார். இந்த நிதியின் மூலம் 20 ஆயிரம் போர்வைகளை விலைக்கு வாங்கி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக வழங்கிட மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச போர்வைகைள வழங்கும் நிகழ்ச்சி பண்ருட்டி ஒன்றியம் மருங்கூர் கிராமத்திலும், குறிஞ்சிப்பாடியிலும் நடந்தது. கடலூர் மாவட்ட தி.மு.க.செயலாளர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் இந்த 2 நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். இலவச போர்வையை தி.மு.க. நிர்வாகிகளிடம் வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

               முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் நந்த கோபால கிருஷ்ணன், சபா. ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் பாஸ்கரன், ஒன்றிய தி.மு.க. செய லாளர்கள் சிவகுமார், வி.கே. வெங்கட்ராமன், தலைமை செயற்குழு ஜெயராமன், நகர செயலாளர் புகழேந்தி, ராஜேந்திரன், மணிவண்ணன், மாவட்ட இலக்கிய அணிஅகரம் நாராயணசாமி,மாவட்ட நெசவாளரணி பழனிசாமி, கடலூர் ஒன்றிய துணைச் செயலாளர் ஞானசேகரன். குறிஞ்சிப்பாடி ஒன்றிய அவைத்தலைவர் ராமலிங் கம், வடலூர் பேரூராட்சி தலைவர் ராமச்சந்திரன், அவைத்தலைவர் திருநீலம், குறிஞ்சிப்பாடி பொருளாளர் ராமர், விடுதலை சேகர், இளைஞரணி கே.ஆர். ராமச்சந்திரன், கே.பி.ஆர். பாலமுருகன், டி.எம். குமார். பண்ருட்டி ஒன்றிய இளைஞர் அணி ஞானமணி,பண்ருட்டி ஒன்றிய அவைத்தலைவர் புலவர் நாராயணசாமி, பொருளாளர் பொன்னம் பலம், ஒன்றிய துணைச் செயலாளர் ஜெயராமன், எல்.என்.புரம் துரைராஜ், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் சிவமுருகன், மருங்கூர் ஜனார்த்தனம், அண்ணா கிராமம் புருஷோத்தமன், வடலூர் சுப்பராயலு, ஷாகுல் அமீது உள்ளிட்ட ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். 










0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior