உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 02, 2012

பரங்கிப்பேட்டை அருகே 3 பெயர்களில் போலியாக பாஸ்போர்ட் மீனவர் மீது வழக்குப்பதிவு

பரங்கிப்பேட்டை:
 
                  புதுச்சத்திரம் அருகே மூன்று பெயர்களில் போலியாக பாஸ்போர்ட் வாங்கி வெளிநாடு சென்று வந்த மீனவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 
         கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அடுத்த சாமியார்பேட்டையைச் சேர்ந்தவர் முருகன், 50; மீனவர். இவர் போலி ஆவணங்கள் கொடுத்து மூன்று பெயர்களில் பாஸ்போர்ட்டுகள் எடுத்து சிங்கப்பூர் சென்று வந்ததாக முதல்வர் தனிப்பிரிவிற்கு புகார் தெரிவிக்கப்பட்டது.அதன் பேரில் புதுச்சத்திரம் போலீசார் முருகனிடம் விசாரணை நடத்தினர். அதில் முருகன், முனியப்ப முருகன், முனியாண்டி முருகன் என மூன்று பெயர்களில் பாஸ்போர்ட் வாங்கி சிங்கப்பூர் சென்று வந்துள்ளது தெரியவந்தது. இதுகுறித்து முருகன் மீது புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior