உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 21, 2012

ரியல் தொண்டு நிறுவனம் சார்பில் 1,500 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்

கடலூர் :
 
       புயலில் பாதிக்கப்பட்ட 1,500 மாணவர்களுக்கு ரியல் தொண்டு நிறுவனம் கல்வி உபகரணங்கள் வழங்கியது.
 
       "தானே' புயலில் பாதிக்கப்பட்ட கடலூர், பண்ருட்டி ஒன்றியங்களில் உள்ள அரசடிக்குப்பம், கீரப்பாளையம், வெள்ளக்கரை, சாத்தங்குப்பம், ராமாபுரம், அழகப்பசமுத்திரம், சிறுதொண்டமாதேவி, அ.புதூர், வேகாகொல்லை, காட்டு வேகாக்கொல்லை, வெங்கடாம்பேட்டை, ஆயிப்பேட்டை, மதனகோபாலபுரம், தியாகவல்லி, அம்பேத்கர் நகர், நொச்சிக்காடு கிராமங்களைச் சேர்ந்த 1,500 மாணவ, மாணவிகளுக்கு ரியல் தொண்டு நிறுவனம் சார்பில் நோட்டு, புத்தகம், ஸ்கூல் பேக், ஜாமெண்ட்ரி பாக்ஸ் உள்ளிட்ட கல்வி உபகரணங்களும் மற்றும் அங்கன்வாடி செல்லும் 500 குழந்தைகளுக்கு ஜான்ஸ் பேபி கிட், பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்பட்டன.
 
         நிகழ்ச்சியில் ஜெர்மனைச் சேர்ந்த தன்னார்வலர்கள் ரோன்ஜா சாம்ஸ், ஜோஹனா டோல், ஊராட்சித் தலைவர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், ரியல் நிறுவன திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் குமார், கஸ்தூரி, ராமு, ஜான், பாக்கியலட்சுமி, ராஜலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior