உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 21, 2012

புவனகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கழிப்பிட வசதியின்றி மாணவிகள் அவதி

புவனகிரி :
     
        புவனகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளின் எண்ணிக்கைக்கேற்ப கழிப்பிட வசதி செய்து கொடுக்கப்படாததால் மாணவிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
      புவனகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நகரின் மைய பகுதியில் அமைந்துள்ளது. இப்பள்ளியில் புவனகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்து 700 மாணவிகள் படித்து வருகின்றனர். 35க்கும் மேற்பட்ட ஆசிரிய, ஆசிரியைகள் பணிபுரிந்து வருகின்றனர்.

        இவர்களுக்கு போதுமான கழிப்பிட வசதிகள் இருந்தும் அவை சரியான முறையில் பராமரிக்கப்படாததால் மதிய வேளையில் மாணவிகள் கழிப்பிடம் வேண்டி அருகிலுள்ள வெள்ளாற்றிற்கு செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.  மேலும், பள்ளிக்கு வரும் மாணவிகள் தங்களது இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே அர” பள்ளி கழிப்பிடத்தை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior