உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, பிப்ரவரி 18, 2012

கடலூர் மாவட்டத்திற்கு களப்பணி பயிற்சிக்கு 39 எஸ்.ஐ.,க்கள் வருகை

கடலூர் :

        சென்னையில் பயிற்சி முடித்த 39 சப் இன்ஸ்பெக்டர்கள் களப்பணி பயிற்சிக்கு கடலூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளனர். 

         சென்னை ஊனமாஞ்சேரியில் உள்ள போலீஸ் அகாடமியில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 1,061 சப் இன்ஸ்பெக்டர்கள் கடந்ததாண்டு பிப்ரவரி 1ம் தேதி முதல், கடந்த 16ம் தேதி வரை பயிற்சி முடித்தனர். பயிற்சி முடித்தவர்களில் 39 சப் இன்ஸ்பெக்டர்கள் களப்பணி பயிற்சி பெற கடலூர் மாவட்டத்திற்கு அனுப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பெண்கள் உட்பட 32 பேர் கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களிலும், 2 பெண்கள் உட்பட 7 பேர் ஆயுதப்படை பிரிவிலும் ஆறு மாதம் களப்பணி பயிற்சி பெற உள்ளனர்.
 
       அவர்கள் போலீஸ்காரர்களின் அன்றாட பணிகளான சம்மன் சர்வீஸ், கோர்ட்டுக்கு சம்மன் செய்வது, எஸ்கார்டு, நிலைய பொறுப்பு அதிகாரி உள்ளிட்ட பயிற்சிகளை பெறுவர். பயிற்சி முடித்த பின் சப் இன்ஸ்பெக்டர்களுக்கு முறையான பணி வழங்கப்படும்.














0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior