உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, பிப்ரவரி 18, 2012

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

விருத்தாசலம் : 

        விருத்தாசலம் அரசு கல்லூரி மாணவர்கள் அடிப்படை வசதி கோரி வகுப்புகளை புறக்கணித்து ஆர்.டி.ஓ., விடம் மனு கொடுத்தனர். விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி வகுப்புகளை புறக்கணித்தனர். கல்லூரியில் இருந்து ஊர்வலமாகச் சென்ற மாணவ - மாணவிகள் கல்லூரியில் குடிநீர், கழிப்பிடவசதி செய்து தரக் கோரியும், மூடப்பட்டுள்ள நூலகத்தைத் திறக்கவும், லேப்டாப், கல்வி ஊக்கத் தொகை வழங்கக் கோரி இந்திய மாணவர் சங்க நிர்வாகிகளும் சென்று ஆர்.டி.ஓ., ஆனந்தகுமாரிடம் மனு அளித்தனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்.டி.ஓ., கூறியதையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர். 






0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior