உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 08, 2012

நெய்வேலியில் பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தி சாலைகள் அமைக்கப் பயன்படும் மூலப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை

 http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_401578.jpg

நெய்வேலி :

       நெய்வேலியில் பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தி சாலைகள் அமைக்கப் பயன்படும் மூலப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலையை என்.எல்.சி.,சேர்மன் தொடங்கி வைத்தார்.

        என்.எல்.சி., நிறுவனம் மேற்கொண்டு வரும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக, நெய்வேலி வட்டம் 2ல் பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்து, சாலை அமைக்கத் தேவையான மூலப் பொருளாக மாற்றுவதற்கான சிறிய தொழிற்சாலை 19 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இத்தொழிற்சாலையில் 8 மணி நேரத்தில் 250 கி., பிளாஸ்டிக் மூலப்பொருள் தயாரிக்க முடியும். பிளாஸ்டிக் கழிவுகள் 250 டிகிரி சென்டிகிரேட் வெப்ப நிலையில் உருக்கப்படுவதால் டயாக்ஸின் என்ற நச்சு உருவாகாமல், சாலை அமைக்கும் தார் மூலப்பொருள் உருவாக்க முடியும்.
 
          இந்த தொழிற்சாலையினை சேர்மன் அன்சாரி தொடங்கி வைத்தார். அதேப்போன்று நெய்வேலி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள சமூகக் கூடத்திற்கு தற்போது 63 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக உணவருந்தும் அரங்கம் கட்டப்பட்டுள்ளதுடன், 15 லட்சம் ரூபாய் செலவில் திருமண அரங்கம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. புனரமைக்கப்பட்ட சமூகக் கூடத்தையும் சேர்மன் அன்சாரி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் இயக்குனர்கள் சுரேந்தர் மோகன்,சரத்குமார் ஆச்சார்யா, மகிழ்செல்வன், நகர நிர்வாக பொது மேலாளர் சக்ரவரத்தி உட்பட உயர் அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.











0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior