உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, பிப்ரவரி 10, 2012

"தானே" புயலின் பாதிப்புகள் பற்றி தங்கர்பச்சானின் ஆவண படம்

     "தானே" புயலின் பாதிப்புகள் பற்றி டைரக்டர் தங்கர்பச்சான் ஒரு ஆவண படம் தயாரித்து, டைரக்டு செய்திருக்கிறார். இந்த படத்துக்கு அவர், `தானே புயலின் அறுவடை' என்று பெயர் சூட்டியிருக்கிறார்.

    35 நிமிடங்கள் ஓடுகிற இந்த ஆவண படம் தமிழ், ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளில் தயாராகியிருக்கிறது. `தானே' புயலினால் கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்கள் எத்தகையை பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள்? என்பதை படம் சித்தரிக்கிறது.

படம் முடிந்தபின் டைரக்டர் தங்கர்பச்சான் கூறியது

         ’’கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் விழுந்து கிடப்பவை எல்லாம் வெறும் மரங்கள் அல்ல. எங்கள் தாத்தா-பாட்டி. அப்பா-அம்மா. அவர்கள் தலைச்சுமையாக கொண்டுவந்து தண்ணீர் ஊற்றி வளர்த்தவை. மரங்கள் இருந்தால்தான் உயிரினங்கள் வாழும். இதை ஒரு மாவட்ட பிரச்சினையாக பார்க்கக் கூடாது. நாட்டின் பிரச்சினையாக பார்க்க வேண்டும். இந்த பிரச்சினையை தீர்க்க, 8 ஏக்கருக்கு ஒரு ஆழ்துளை கிணறு தோண்ட வேண்டும். இந்த இரு மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கும் குறைந்தது 10 ஆண்டு காலம் ஆய்வு படிப்பு வரை, கல்வி செலவை அரசே ஏற்க வேண்டும்.
மக்களும், அதிகாரிகளும் ஒன்று சேர்ந்து முடிவெடுத்தால்தான் திட்டங்கள் வெற்றி பெறும். எனவே விவசாயிகளிடம் அரசு கருத்து கேட்க வேண்டும்’’ என்று கூறினார்.






0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior