உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 03, 2012

கடலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு நுழைவுச் சீட்டுகள் தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைப்பு

கடலூர்:

          கடலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கான நுழைவுச் சீட்டுகள் சம்மந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டன.  

            கடலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் ஏற்கனவே முடிவடைந்து விட்டன. எழுத்துத் தேர்வுகள் வரும் 8-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி முடிவடைகிறது.  கடலூர் மாவட்டத்தில் 26,853 பேர் பிளஸ்-2 பொதுத் தேர்வு எழுதுகிறார்கள். இவர்களில் 12,835 பேர் மாணவர்கள், 14,018 பேர் மாணவிகள். இவர்களுக்கு புகைப்படம் அச்சிடப்பட்ட நுழைவுச் சீட்டுகள் கடலூர் மாவட்டத்துக்கு வந்து சேர்ந்து விட்டன. மாவட்டத்திóல் 65 மையங்களில் பிளஸ்-2 தேர்வு நடக்கிறது.  

             புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடந்த மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில், சம்மந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்களிடம், மாணவர்களுக்கான நுழைவுச் சீட்டுகளை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜோசப் அந்தோனிராஜ் வழங்கினார்.  ÷இந்த ஆண்டு முதல்முறையாக மாணவர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் மாணவர்களின் புகைப்படம் ஒட்டப்படுவதற்குப் பதில், நுழைவுச் சீட்டிலேயே அச்சிடப்பட்டு அரசுத் தேர்வுகள் துறை இயக்குநகரம் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நுழைவுச் சீட்டில் தேர்வு எழுதும் மாணவரின் புகைப்படம் அச்சிடப்பட்டு இருப்பதுடன், அவர்கள் எழுத இருக்கும் தேர்வுகள், குறியீட்டு எண்களுடன் தேதி வாரியாக அச்சிடப்பட்டு உள்ளது. இதனால் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதும் முறைகேடு, தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

            கடலூர் மாவட்டத்துக்கான பிளஸ்-2 தேர்வு வினாத் தாள்கள் கடலூர் புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட, 7 மையங்களில் சேகரித்து போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் அன்று, தேர்வு நடத்தும் அலுவலர்கள் வந்து, வினாத்தாள்களைப் பெற்றுச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜோசப் அந்தோனிராஜ் தெரிவித்தார்.  ÷பிளஸ்-2 தேர்வுகளை முறைகேடுகள் இன்றி நடத்தி முடிக்கவும், தவறிழைக்கும மாணவர்களைக் கண்டுபிடிக்கவும் கடலூர் மாவட்டத்தில் 30 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் 5 பறக்கும் படைகள் கல்வித்துறை அதிகாரிகள் தலைமையில் இயங்கும். 









0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior