உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 03, 2012

கடலூரில் புயல் மறுவாழ்வு கண்காணிப்பு அலுவலகம் திறப்பு

கடலூர்:

          கடலூர் மாவட்ட புயல் மறுவாழ்வு திட்டக் கண்காணிப்பு அலகு அலுவலகத்தை, ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ கடலூரில் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார். 

           டிசம்பர் 30-ம் தேதி கடலூர் மாவட்டத்தை புயல் மிகமோசமாகப் புரட்டிப் போட்டது. மக்ளின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப் பட்டது. கடலூர் மாவட்ட மக்களுக்கு ரூ. 5 ஆயிரம் கோடிக்கு மேல் சேதம் ஏற்பட்டது.  சேதமடைந்த வீடுகளுக்கும், வேளாண் பயிர்களுக்கும் தமிழக அரசு, நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது. எனினும் முந்திரி, தென்னை, பலா உள்ளிட்ட பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்களை உடனே சரிசெய்துவிட முடியாது. எனவே அதற்கு நீண்டகால மறுவாழ்வுத் திட்டங்களை தமிழக அரசு அறிவித்து நிதியும் ஒதுக்கியுள்ளது.  இப்பணிகளை கண்காணிப்பதற்காக புயல் மறுவாழ்வு திட்டக் கண்காணிப்பு அலகு என்ற புதிய அலுவலகம், வெள்ளக்கிழமை மாலை திறக்கப்பட்டுள்ளது.  இதற்கு அதிகாரியாக நியமிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி வீரராகவராவ், ஆட்சியர் முன்னிலையில் வெள்ளக்கிழமை பதவி ஏற்றுக் கொண்டார்.  

புயல் மறுவாழ்வு திட்டக் கண்காணிப்பு அலுவலகத்தை மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ திறந்து வைத்துப் பேசியது:  

          தமிழக முதல்வர் சட்டப் பேரவையில் அறிவித்த, புயல் மறுவாழ்வு சிறப்புத் தொகுப்புத் திட்டங்களை, ஒருங்கிணைத்துச் செயல்படுத்த ஏதுவாக கடலூரை தலைமையிடமாகக் கொண்டு திட்ட கண்காணிப்பு அலகு அலுவலகம் ஏற்படுத்தப்பட்டு, 2-3-2012 முதல் செயல்படத் தொடங்கி உள்ளது. இதற்கு கொ.வீரராகவ ராவ் ஐ.ஏ.எஸ். கூடுதல் ஆட்சியர், திட்ட அலுவலராகப் பொறுப்பேற்றுள்ளார்.  புயல் பாதித்த விவசாயிகளுக்கான மறுவாழ்வுத் திட்டங்களை, விரைந்து செயல்படுத்த வேளாண்மை, வேளாண்மைப் பொறியியல் தோட்டக்கலை மற்றும் ஊரக வளர்ச்சி ஆகிய துறைகளுக்கு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பொறுப்பு ஏற்றுள்ளனர்.  மேலும் விவசாயிகளின் வசதிக்காக, பண்ருட்டியில் ஒரு கள அலுவலகம் தொடங்குவதற்கும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல்வர் அறிவித்த புயல் மறுவாழ்வு சிறப்பு தொகுப்பு திட்டங்களின் பல்வேறு அம்சங்களும், போர்க்கால அடிப்படையில் விரைந்து செயல்படுத்தப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior