உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 14, 2012

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் கவிதைப் போட்டி பரிசளிப்பு விழா

விருத்தாசலம் :

       கொளஞ்சியப்பர் அரசு கல்லூரி புகைப்பட கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

       விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் "பசுவும் பசித்தவனும்' என்ற தலைப்பில் புகைப்பட கவிதைப் போட்டி நடந்தது. இதில் எம்.ஏ., (தமிழ்) முதலாண்டு மாணவி பிரேமலதா முதலிடமும், பி.ஏ., (தமிழ்) மூன்றாமாண்டு மாணவர் பிரபாகரன் இரண்டாமிடமும், எம்.எஸ்சி., (கணிதம்) இரண்டாமாண்டு மாணவர் ஏழுமலை மூன்றாமிடமும் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு தென்னக ரயில்வே போக்குவரத்து ஆய்வாளர் ஜெகதீசன் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார். நிகழ்ச்சியில் தமிழ்த் துறை தலைவர் முத்தழகன், பேராசிரியர்கள் தண்டபாணி, சிவக்குமார், கருணாநிதி, புவனேஸ்வரி, ராணி, ராஜசேகர், வேணி, ராதா, துரைராசு, சிவக்குமார், சாலமன், நேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior