உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 14, 2012

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இந்தோ - ஜெர்மன் பன்னாட்டு தொழில்நுட்ப பயிலரங்கம்

சிதம்பரம் :

     அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் பொருளாதாரத் துறை சார்பில் நடந்து வந்த இந்தோ - ஜெர்மன் பன்னாட்டு தொழில்நுட்ப பயிலரங்கம் நிறைவடைந்தது.

    சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் பொருளாதாரத் துறை மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த வி.ஓ.ஜி.டி., நிறுவனம் சார்பில் "தொழில்நுட்ப மற்றும் பொருளாதார திறன் உள்ள மண் வலுவூட்டுதல் மற்றும் நுண் செலுத்தும் தொழில் நுட்பங்கள்' குறித்த இந்தோ - ஜெர்மன் பன்னாட்டு தொழில்நுட்ப பயிலரங்கம் நடந்தது.
நிறைவு விழாவில் ஜெரின் டெக் நிறுவன மேலாண் இயக்குனர் அரேஸ் ஆலிவர் வரவேற்றார். வேளாண் புல முதல்வர் கதிரேசன் தலைமை தாங்கினார்.

       வி.ஓ.ஜி.டி., இயக்குனர் ஜொகனா வெப்பர் நிறைவுரையாற்றினார். இணை பேராசிரியர் ராமநாதன் விழா ஏற்பாடுகளை செய்திருந்தார். துணை பேராசிரியர் சீனுவாசன் தொகுப்புரை வழங்கினார். நூற்றுக்கணக்கான ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வேளாண் மாணவ, மாணவிகள் பங்கேற்று இரண்டு நாட்கள் நடைபெற்ற இப்பயிற்சியில் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு தழை, மணி மற்றும் சாம்பல் சத்து உரங்கரை மெதுவாகவும், திறன் மேம்பட்ட வகையிலும் பயன்படுத்துவது குறித்த செயல்முறை விளக்கங்களுடன் எடுத்துரைக்கப்பட்டது. கருவி செயல்பாட்டுடன் செயல் விளக்கக் கையேடு வழங்கப்பட்டது. சுந்தரவரதராஜன் நன்றி கூறினார்.

















0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior