உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 05, 2012

என்.எல்.சி., நிறுவன தொழிற்சங்க தேர்தலில் அ.தி.மு.க.தொழிற்சங்கத்தினருக்கு அங்கீகாரம்

நெய்வேலி :

   நெய்வேலி நகரில் தொழிற்சங்க அங்கீகாரம் பெற்றதையடுத்து அ.தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

       என்.எல்.சி., நிறுவன தொழிற்சங்கங்களுக்கான ரகசிய ஓட்டுப்பதிவில் அ.தி.மு.க., தொழிற்சங்கத்தினருக்கு அங்கீகாரம் கிடைத்தது. இதையடுத்து, நெய்வேலி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள அ.தி.மு.க., தொழிற்சங்க அலுவலக வளாகத்தில் திரண்டிருந்த தொழிலாளர்களுக்கு எம்.எல்.ஏ.,க்கள் சொரத்தூர் ராஜேந்திரன், சிவசுப்ரமணியன் மற்றும் சின்னசாமி நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து எம்.எல். ஏ.,க்கள் தலைமையில் நகர செயலர் ரவிச்சந்திரன், தொழிற்சங்க தலைமை நிர்வாகிகள் ராம உதயகுமார், அபு, தட்சணாமூர்த்தி, ஜெ., பேரவை நிர்வாகிகள் ஜெயக்குமார், மனோகரன், சொர்ணமூர்த்தி, தொழிற்சங்க நிர்வாகிகள் வெற்றிவேல், பாலசுப்ரமணியன், ரகுராமன், ராமலிங்கம், தமிழ்ச்செல்வன், அல்போன்ஸ், ஜோதி, ராஜா, கஞ்சமலை, தனவேல், ராஜகோபால், இளங்கோவன், சேகர், ஆறுமுகம், சுரேஷ்குமார் உட்பட 200க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.








0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior