உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 05, 2012

குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரில் ஆண்டு மற்றும் விளையாட்டு விழா

குறிஞ்சிப்பாடி :

      குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரில் ஆண்டு மற்றும் விளையாட்டு விழா நடந்தது.

       தமிழ்த்துறைத் தலைவர் சிவபாலன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் சேரமான் தலைமை தாங்கினார். கல்லூரி நிர்வாக குழுத்தலைவர் சட்டநாதன் முன்னிலை வகித்தார். கல்லூரி நிர்வாக அதிகாரி பேராசிரியர் முத்துக்குமரன் ஆண்டறிக்கை வாசித்தார். பேராசிரியர் முனைவர் அகரமுதல்வன் கட்டுரை, கவிதை, கையெழுத்துப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், துறைவாரியாக முதல் மதிப்பெண் பெற்றவர்களுக்கும் பரிசு வழங்கினார். கல்லூரி நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ராமலிங்கம், சுந்தரமூர்த்தி வாழ்த்திப் பேசினர். விளையாட்டு விழாவில் அண்ணாமலைப் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் பேராசிரியர் முனைவர் ரவீந்திரன் சிறப்புரையாற்றி கல்லூரில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.

       விளையாட்டுப் போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை பி.பி. எ., பிரிவு மாணவர்களும், இரண்டாவது இடத்தை பி.காம்., பிரிவு மாணவர்களும் பெற்றனர். விழா ஏற்பாடுகளை மேலாளர் சிவராஜ், உதவிப் பேராசிரியர் வேல்முருகன், கல்லூரி அலுவலர்கள் செய்திருந்தனர்.





0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior