உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 05, 2012

குள்ளஞ்சாவடி பகுதியில் காசநோய் தின விழிப்புணர்வு முகாம்

கடலூர் : 

     குள்ளஞ்சாவடி பகுதியில் காசநோய் தின விழிப்புணர்வு முகாம் நடந்தது. கடலூர் பொயட்ஸ் தொண்டு நிறுவனம் மற்றும் சென்னை ரீச் தொண்டு நிறுவனமும் இணைந்து கடலூர் அடுத்த அன்னவல்லி, பெரியகாட்டுசாகை, சுப்ரமணியபுரம், பள்ளிநீரோடை, தாதங்குப்பம், ராமநாதன்குப்பம், கள்ளையங்குப்பம், அகரம், குள்ளஞ் சாவடியில் காசநோய் குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. அதில் காசநோயின் அறிகுறி, "டாட்ஸ்' குறுகிய கால நேரடி கண்காணிப்பு சிகிச்சை விவரம், காசநோ ய்க்கு அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அளிக்கப்படும் இலவச சிகிச்சை குறித்து கிராம மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை பொயட்ஸ் தொண்டு நிறுவன திட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் செய்திருந்தார்.




0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior