உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 17, 2012

கடலூர் சில்வர் பீச்சில் தீயணைப்பு கருவிகள் குறித்த கண்காட்சி

கடலூர் :

கடலூரில் தீ தொண்டு நாள் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் தீயணைப்பு கருவிகள் குறித்த கண்காட்சி நடந்தது. கடலூர் கோட்ட அலுவலர் குமாரசாமி துவக்கி வைத்தார். கண்காட்சியில் தீயணைப்பு மீட்பு மற்றும் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் போது பயன்படுத்தக் கூடிய ஹைட்ராலிக், மூச்சு கருவி, புகை போக்கி உட்பட பல்வேறு விதமான கருவிகள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. மேலும், கண்ணாடி விரியன், மண்ணுளி மற்றும் நல்ல பாம்புகளும் இடம் பெற்றிருந்தன. கண்காட்சியை பார்வையிட வந்த பொதுமக்களுக்கு தீ தடுப்பு வழிமுறைகள் குறித்து செயல்விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது. தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நிலைய அலுவலர்கள் கடலூர் வீரபாகு, சிப்காட் கருணாகரன் ஆகியோர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் ராஜசேகரன், நாகராஜ், திருநாவுக்கரசு, பிரபு ஆகியோர் செய்திருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior