உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஏப்ரல் 25, 2012

கடலூர் ஒன்றியத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு பணி துவக்கம்

கடலூர்:

கடலூர் அடுத்த கோண்டூர் பகுதியில் சமூக பொருளாதார சாதி வாரி கணக்கெடுப்புப் பணி துவங்கியது. சமூக பொருளாதார சாதி வாரி கணக்கெடுப்பு பணி தமிழகம் முழுவதும்  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கணக்கெடுப்பாளர்களுக்கு இதற்கென சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கடலூர் ஒன்றியத்திற்குட்பட்ட கோண்டூர் அடுத்த சாரதா நகரில் நேற்று சாதி வாரி கணக்கெடுப்பு பணி துவங்கியது. இதனை உதவி செயற் பொறியாளர் (சுனாமி) செல்வமுருகன் துவக்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், பத்மநாபன் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜவகர் உட்பட பலர் பங்கேற்றனர்.






0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior