உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஏப்ரல் 25, 2012

கடலூர் மாவட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு பணி துவக்கம்

கடலூர்: 

கடலூர் மாவட்டத்தில் சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு பணி துவங்கியது. கலெக்டர் ராஜேந்திர ரத்னு முகாம் அலுவலத்தில் நேற்று அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தினர். சமூக பொருளாதார முன்னேற்றம் மற்றும் சாதிவாரிய கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு  உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து கணக்கெடுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, ஒவ்வொரு குடும்பத்தினரிடம் கேட்கப்பட வேண்டிய கேள்விகள் மற்றும் கணக்கெடுப்பு எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

 கடலூர் மாவட்டத்தில் கணக்கெடுப்பு பணிக்காக 23 மையங்கள், 1459 கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள், 1324 டேட்டா எண்டிரி ஆபரேட்டர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கணக்கெடுப்பு பணி @நற்று முன்தினம் துவங்கியது. நேற்று சா திவாரி கணக்கெடுப்பாளர்கள் கடலூரில் கலெக்டரின் முகாம் அலுவலகத்திற்கு சென்று கலெக்டர் ராஜே ந்திர ரத்னுவிடம் விபரங்களை கேட்டு பதிவு செய்தனர். கணக்கெடுப்பு பணிகள் முறையாக நடக்கின்றதா என்பதை ஆய்வு செய்ய அனைத்து மையங்களிலும் மண்டல அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.




0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior