உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 24, 2012

பிளஸ் 2 தேர்வில் குறிஞ்சிப்பாடி எஸ்.கே.வி.மேல்நிலைப்பள்ளியில் 97 சதவீதம் தேர்ச்சி

குறிஞ்சிப்பாடி : 

குறிஞ்சிப்பாடி எஸ்.கே.வி., மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் 97 சதவீதம் தேர்ச்சியடைந்தனர். குறிஞ்சிப்பாடி எஸ்.கே.வி., மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2வில் 389 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 378 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். 

மாணவி சவுமியா

தமிழ் பாடத்தில் 188 மதிப்பெண்கள், 
ஆங்கிலம் 174, 
இயற்பியல்192, 
வேதியியல் 189,
உயிரியல் 166, 
கணிதம் 197 
மதிப்பெண்களுடன்1200க்கு 1106 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார்.

மாணவர் நிர்மல் 
வேதியியல் பாடத்தில் 200 க்கு 200 மதிப்பெண், 
கணிதம் 199, 
இயற்பியல் 195 மதிப்பெண்களுடன்
1200க்கு 1098 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தை பெற்றார்.


மாணவர் யுவராஜ் 1200க்கு 1082 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பெற்றார்.

வணிகவியல் பாடத்தில் மாணவி பாக்கியலட்சுமி 200க்கு 200 பெற்றார். 
வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும், மாணவர்களின் வெற்றிக்காக உழைத்த ஆசிரியர், பெற்றோருக்கு பள்ளி செயலர் செல்வராஜ், தலைமை ஆசிரியர் நமச்சிவாயம் வாழ்த்து தெரிவித்தார்.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior